Minggu, 29 Mei 2011

seerappadum samachcheer puththagangal

கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்
சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் !
கல்வி அமைச்சகம் கீழ்
பல பாடத் திட்டங்கள்;
'மாணவர் ஒரே நிலை;
கல்வியும் ஒரே நிலை!'
என்ற சீரிய நோக்கின்
விளைவே சமச்சீர் கல்வி!
எல்லாத் தரப்பிலும்
ஏகபோக வரவேற்பு!
புது நூல்கள் அச்சாகி,
பள்ளிகளுக்கு வந்தன.
வந்ததோ வந்தது தேர்தல்!
ஆட்சி மாற்றமும் வந்தது!
மீண்டும் அம்மாவின் எழுச்சி!
கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!
'சமச்சீர் கல்வி வேண்டும்,
பாடங்கள் மாற வேண்டும;'
இது புதிய அரசின் கொள்கை!
மீண்டும் பழைய புத்தகங்கள்
மாணவர்க்கு வழங்கப்படும்.
விலைவாசி உயர்வால் மக்கள்
வாங்கிய அடிகளின் அத்தனை
வரிகளும் மக்களின் முதுகில்!
பத்தாம் வகுப்பு நூல்களின்
நகல் எடுத்துப் பகல் முதுழும்
பாடம் நடத்தின பல பள்ளிகள்!
விழலுக்கு இறைத்த நீராயிற்று!
பாடங்களின் வழிகாட்டி நூல்களை
மாணவர் தந்து உதவிக் கொள்வர்.
அவ்வளவு நூல்களும் கடைகளில்
சங்கமமாகி, சுருள்களாயிப் போயின!
வழிகாட்டி நூல்கள் வெளியாகவில்லை;
விரைவில் கிடைப்பது குதிரை கொம்பே!
மாணவர், பெற்றோர், ஆசிரியர் அவதி;
கண்ணான கல்வியோ கரை காணா அகதி!
இது அரசின் முழு மூச்சு முழக்கம்:
'தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.'
பழைய அரசின் திட்டங்களைத் தீண்டாமை
பாவச்செயல், பெரும் குற்றம் அல்லவா!
புத்தகம், சட்டசபை பழையது மேல் எனில்
பழைய ஆட்சியே மேல் என மக்கள்
சிந்திக்க மாட்டார்களா என்ன!

உமர்தம்பிஅண்ணன்

Umar 25 May, 2011


--
Source: http://thendral.blogspot.com/2011/05/seerappadum-samachcheer-puththagangal.html

0 komentar:

Posting Komentar

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Sweet Tomatoes Printable Coupons